செம்மலை ஸ்ரீ வேல் முருகன் அருள் ஞான பீடம் மலைக்கோயில்

செங்கல்பட்டு, தமிழ்நாடு.

போக்குவரத்து விவரம்

இத்தலம் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வழித்தடத்தில் உள்ள செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து தெற்கே 55 கிலோ மீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து கிழக்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும், கல்பாக்கம் மற்றும் மாமல்லபுரத்திலிருந்து மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுராந்தகத்திலிருந்து வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

திருக்கோவிலானது பேருந்து மற்றும் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆட்டோ வசதியும் உள்ளது. இராம பாளையம் முருகன் கோவில் என்று கூறவும்.